கொழும்பில் இன்று (20) பிற்பகல் ஒரு மணிமுதல் ஹைலெவல் வீதி, சுதந்திர சதுக்கம் மற்றும் காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20) மாலை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படவுள்ளமையினால் இந்த விசேட போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.