வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் (Lyrid) விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு மேற்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
லிரிட்ஸ் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நீடித்திருக்கும், அந்தவகையில் இந்த விண்கல் மழையானது நாளை காலை அதிகமாக இருக்கும் என்றும் முழு நிலவு இருப்பதால் பார்ப்பது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும்.