வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

207

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுகிறனர் என தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுகின்ற பஸ்களை கண்டறிந்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான பஸ் சாரதிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here