follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

Published on

எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆரச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பன்னிரண்டாயிரம் ரூபாய் மின் கட்டணம் மட்டுமே செலுத்தவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுமானால், சாதாரண மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் முறையினை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர;

“மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் அரசாங்கம் அவமானமும், அசௌகரியமும் அடைகிறது. அங்கும் இங்குமாக மின்சாரத்தை துண்டிக்க அமைச்சர், அரசு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சென்று கூறுவதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதை தொடர்ந்தும் செய்கிறது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதில் வேலை செய்ததா இல்லையா என்பது குறித்து மின்சார வாரியம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...