எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆரச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பன்னிரண்டாயிரம் ரூபாய் மின் கட்டணம் மட்டுமே செலுத்தவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுமானால், சாதாரண மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் முறையினை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர;
“மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் அரசாங்கம் அவமானமும், அசௌகரியமும் அடைகிறது. அங்கும் இங்குமாக மின்சாரத்தை துண்டிக்க அமைச்சர், அரசு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சென்று கூறுவதாக மக்கள் நினைக்கின்றனர்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதை தொடர்ந்தும் செய்கிறது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதில் வேலை செய்ததா இல்லையா என்பது குறித்து மின்சார வாரியம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.”