follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

Published on

எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆரச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பன்னிரண்டாயிரம் ரூபாய் மின் கட்டணம் மட்டுமே செலுத்தவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுமானால், சாதாரண மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் முறையினை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர;

“மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் அரசாங்கம் அவமானமும், அசௌகரியமும் அடைகிறது. அங்கும் இங்குமாக மின்சாரத்தை துண்டிக்க அமைச்சர், அரசு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சென்று கூறுவதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதை தொடர்ந்தும் செய்கிறது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதில் வேலை செய்ததா இல்லையா என்பது குறித்து மின்சார வாரியம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.”

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...