follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

முன்னறிவிப்பின்றிய மின்துண்டிப்பு குறித்து விசாரணை

Published on

எவ்வித முன்னறிவிப்புமின்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆரச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பன்னிரண்டாயிரம் ரூபாய் மின் கட்டணம் மட்டுமே செலுத்தவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுமானால், சாதாரண மக்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் முறையினை கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர;

“மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் அரசாங்கம் அவமானமும், அசௌகரியமும் அடைகிறது. அங்கும் இங்குமாக மின்சாரத்தை துண்டிக்க அமைச்சர், அரசு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சென்று கூறுவதாக மக்கள் நினைக்கின்றனர்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதை தொடர்ந்தும் செய்கிறது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு இதில் வேலை செய்ததா இல்லையா என்பது குறித்து மின்சார வாரியம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...