முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் எழுத்தாணை மனுக்களை இம்மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என் சமரகோன் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, மருந்து விநியோக பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்கவின் எழுத்தாணை மனுவையும் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.