follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இலங்கையில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டம்

இலங்கையில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டம்

Published on

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் காட்டுகிறது.

375 இராணுவ வீரர்கள், 25 கடற்படை வீரர்கள், 25 விமானப்படை வீரர்கள், மற்றும் 25 பொலிஸார் ஆகியோருக்கு செயற்கை கை கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது.

இதற்காக செயற்கை உடல், உறுப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...