follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு

Published on

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர் தரப்பிலான நிலைப்பாட்டினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.

அங்கு, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் அவர் விசாரிக்கப்படுவார், அங்கு அவர் விரும்பினால் ‘பி’ மாதிரி பரிசோதனையை கோரலாம்.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ​​இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய சோதனையில் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

செமினி அல்விஸின் ‘ஏ’ சிறுநீர் மாதிரியில் தசை வளர்ச்சிக்கு உதவும் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஸ்டெராய்டுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...