follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2கொழும்பில் ஆபத்தான மரங்களை அகற்ற விசேட வேலைத்திட்டம்

கொழும்பில் ஆபத்தான மரங்களை அகற்ற விசேட வேலைத்திட்டம்

Published on

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றுவதற்காக இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...