follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2வாயால் கூறுவதில் பயனில்லை - உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

வாயால் கூறுவதில் பயனில்லை – உடனடியாக சுற்றறிக்கையை விடுங்கள்.

Published on

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இதற்கான சட்ட அதிகாரங்களை வழங்கும் சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அறிவிக்காமல், புதிய சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலாளர்களுக்கு சட்டரீதியாக அறிவிப்பை விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாய்மொழியாக அறிவுரைகளை வழங்குவது போதுமானதாக அமையாது. அதிகரிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை மூலமே செயல்படுத்துகின்றனர். எனவே இந்த சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...