அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு மற்றும் சமைத்த உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இதற்கான சட்ட அதிகாரங்களை வழங்கும் சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மாத்திரம் அறிவிக்காமல், புதிய சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலாளர்களுக்கு சட்டரீதியாக அறிவிப்பை விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் வாய்மொழியாக அறிவுரைகளை வழங்குவது போதுமானதாக அமையாது. அதிகரிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றறிக்கை மூலமே செயல்படுத்துகின்றனர். எனவே இந்த சுற்றறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.