follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2இலங்கையில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்

Published on

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நோய்க்கான பாக்டீரியாக்கள் நீரில் கலந்த பிறகு, அது மனிதனின் கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் வழியாக மனித உடலில் நுழைகிறது.

ஒரு ஆண்டில் எலிக்காய்ச்சலால் 100 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருவதாக தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் துஷானி தாபரே தெரிவித்தார்.

எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை, குருணாகலை போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மாணிக்கக்கல் அகழ்வுத் தொழிலாளர்கள் மற்றும் கழிவுநீர், கால்வாய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எலிக்காய்ச்சல் அபாயத்தில் அதிகம் உள்ளதாகவும் டொக்டர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...