follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2ஹிங்குரான்கொட விமான நிலையத்தை புதுப்பிக்க அனுமதி

ஹிங்குரான்கொட விமான நிலையத்தை புதுப்பிக்க அனுமதி

Published on

ஹிங்குரான்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நியமங்களுக்கு அமைவாக ஹிங்குரான்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான நிலையம் மற்றும் அது தொடர்பான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், ஹிங்குரான்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...