follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ஹிங்குரான்கொட விமான நிலையத்தை புதுப்பிக்க அனுமதி

ஹிங்குரான்கொட விமான நிலையத்தை புதுப்பிக்க அனுமதி

Published on

ஹிங்குரான்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நியமங்களுக்கு அமைவாக ஹிங்குரான்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான நிலையம் மற்றும் அது தொடர்பான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம், ஹிங்குரான்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...