க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.