follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP2அஸ்வெசும - 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

Published on

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அவற்றை ஆராய்ந்த பின்னர் அதற்கான குழுவினால் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் அது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஏனைய மாகாணங்களில் அதிகாரிகள் தரப்பில் சில தயக்கம் காணப்படுவதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது முதற்கட்ட நிவாரணத்தின் கீழ் சுமார் 18 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நன்மை 4 வகைகளின் கீழ் வழங்கப்படுவதுடன் இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மாதாந்திர கொடுப்பனவாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்தவுடன், முதல் கட்டமாக அஸ்வெசும பெறும் பயனாளிகளின் தரவுகள் உடனடியாக புதுப்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...