follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பங்களாதேஷில் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

பங்களாதேஷில் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை

Published on

பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(23) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பங்களாதேஷில் 2,835 இலங்கையர்கள் தொழில் மற்றும் தொழிற் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான எண்ணிக்கையை உடனடியாக தெரிவிக்க முடியாது.

எவ்வாறெனினும், அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்குள்ள நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து வருகிறோம். அவர் வழங்கிய தகவல்களின்படி இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...