follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

Published on

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பிற்கு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சிறைக்கைதியான சுதேஷ நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு இந்த உத்தரவை வழங்கியது.

இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...