follow the truth

follow the truth

August, 3, 2025
HomeTOP2அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

Published on

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பிற்கு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சிறைக்கைதியான சுதேஷ நந்திமால் டி சில்வா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிக்கு இந்த உத்தரவை வழங்கியது.

இதற்கமைய மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டுமென குறிப்பிட்டு அழைப்பாணை விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...