follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்

Published on

4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டநிலையில், கடந்த 16 ஆம் திகதி விமான நிலையம் – கோட்டை பஸ் ஊழியர் சங்கம் புதிய சொகுசு பஸ் சேவைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

அத்தோடு இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்தது.

இந்நிலையில், முறைப்பாடுகளை பரிசீலித்து விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...