follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP22025 முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாய்

2025 முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாய்

Published on

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இதன்படி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஊக்குவிப்பு கொடுப்பனவாக 5000 ரூபாவும், சீருடை கொடுப்பனவாக 2500 ரூபாவும் சேர்த்து வருடாந்த கொடுப்பனவாக 7500 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...