follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவொன்று வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு முரணாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி செயற்பட்டதன் ஊடாக கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...