follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

Published on

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில் எரிபொருள் கொண்டு சென்ற ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,
மற்றுமொரு யானை காயம் அடைந்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு சென்ற ரயிலும் தடம்புரண்ட, அதேநேரம் ரயில் வீதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானைகள் ரயில் மார்க்கத்தைக் கடப்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த ரயில், வேக வரம்பை விடவும் அதிக வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...

22 நாட்களில் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில், 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை 2025 நவம்பர் 10 ஆம் திகதி...