follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2கடவுச்சீட்டு டோக்கன் பெற மீண்டும் நீண்ட வரிசை

கடவுச்சீட்டு டோக்கன் பெற மீண்டும் நீண்ட வரிசை

Published on

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு...

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...