follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Published on

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிகத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு (CEFAP) கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

என்றாலும், தற்போது அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவும் பின்வரும் காரணங்களுக்காகவும் முறையான கடிதங்கள் மூலம் உரிமம் பெற்ற அனைவருக்கும் அறிவிக்க போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை 2024.11.04 முதல் 2024.11.21ஆம் திகதி வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், மேற்படி கால நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதி பெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...