follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பம் - ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை

போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பம் – ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை

Published on

பரீட்சை ஆணையாளரினால் நேற்று (08) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினால் போக்குவரத்து கொடுப்பனவுகள் தொடர்பில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சை ஆணையாளரினால் வழங்கப்பட்ட இரண்டு கடிதங்களால் பரீட்சை ஊழியர்களுக்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதலாவது கடிதம் வழங்கப்பட்டது. அந்த கடிதத்தின்படி, பரீட்சை மண்டபத்தில் இருந்து பயணிக்கும் தூரம் 10 கிலோமீற்றருக்கு அதிகமாக இருந்தால் 1000 ரூபா செலுத்த முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் மாதம் 8ஆம் திகதி பரீட்சை ஆணையாளரால் மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி 1000 ரூபாவாக இருந்த போக்குவரத்து கொடுப்பனவு 500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 முதல் 10 கிலோமீற்றர் இடைப்பட்ட தூரத்திற்காக 750 ரூபா முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது 400 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 5 கிலோமீற்றருக்க 500 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது அது ​​300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கிலோமீற்றருக்கு குறைவாக இருந்தால் 300 ரூபா வழங்குவதாகவும், அது தற்போது 200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பரீட்சை கண்காணிப்பாளருக்கும் கொடுப்பனவு வழங்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடிதமொன்று வௌியிடப்பட்டு இவ்வாறு கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அனைவரும் குழப்பத்தில் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...