follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி அரிசி சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி அரிசி சந்தைக்கு

Published on

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.

அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை கச்சா அரிசி ஒரு கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றும் (12) நாளையும் (13) கூடுதலான அரிசி கையிருப்பு நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவிக்கின்றார்.

நேற்றிரவு “டிவி தெரணவில்” ஒளிபரப்பான புதிய பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திரு.சமித பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...