follow the truth

follow the truth

May, 4, 2025
Homeவிளையாட்டுஇந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

இந்தியில் தான் பேசுவாரா? ஜடேஜாவை விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள்

Published on

பார்டர் கவாஸ்கர் டிராபி நடந்து வரும் சூழலில், பாதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

அவரது ஓய்வு குறித்து சக வீரரான ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இந்திய ஊடங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பேட்டி அளித்த ஜடேஜா முழுவதுமாக ஹிந்தியில் பேசியுள்ளார். இதனையடுத்து ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்து உள்ளனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மட்டுமே. இதனால் ஜடேஜா இந்தியில் பேசினார்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை கிளப்பவே எப்போதும் முயற்சி செய்கின்றன என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய செய்தியாளர் சுபயன் சக்ரவர்த்தி கூறினார்.

அஸ்வின் ஓய்வை அறிவிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக தான் அந்த தகவல் தனக்கு தெரியும் என்று நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...