follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2சுதந்திர தின ஒத்திகை - கொழும்பில் மூடப்படும் வீதிகள்

சுதந்திர தின ஒத்திகை – கொழும்பில் மூடப்படும் வீதிகள்

Published on

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவிற்காக சிறப்பு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 ஆம் திகதி வரை ஒத்திகைகள் நடைபெற உள்ளன.

குறித்த நாட்களில் காலை 06.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கொழும்பில் வீதிகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு

கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்

கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...