follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2நாயை தூக்கிலிட்ட பெண்ணொருவர் கைது

நாயை தூக்கிலிட்ட பெண்ணொருவர் கைது

Published on

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை தூக்கிலிட்டு கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியானதை தொடர்ந்து, பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைதுசெய்துள்ளதுடன், 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் வதை தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...