follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1மின் துண்டிப்பு தொடரும் - இலங்கை மின்சார சபை

மின் துண்டிப்பு தொடரும் – இலங்கை மின்சார சபை

Published on

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் சமநிலையில் பேணமுடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கோளாறை சீர்செய்வதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை உறுதியாகக்கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...