follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்

Published on

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முதற் கட்ட கலந்துரையாடல் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுகாதாரத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கலை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் கண்டறிந்து, டிஜிட்டல் மயமாக்கல் தீர்வுகளை செயல்படுத்துவதற்கான ஒருமூலோபாய கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை (HIQI, HSEP, PHSEP) செயல்படுத்துவதே இந்தக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான கூட்டுவாய்ப்புகளை ஆராய்வதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜனஊடக அமைச்சகம் மற்றும் டிஜிட்டல் ருளாதார அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இணைந்தனர்.

இங்கு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சுகாதார தகவல்பிரிவு, சுகாதாரத்துறைக்கான தற்போதைய டிஜிட்டல் உருமாற்றத்திட்டம், தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால இலக்குகளை முன் வைத்தது, அதே நேரத்தில் டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் பொறியாளர் எரங்கவீரரத்ன மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருணஸ்ரீதனபால ஆகியோர் தேசிய டிஜிட்டல்மயமாக்கல் உத்தி மற்றும் சுகாதாரத்துறைக்கான அதன்பயன்பாடுகள் குறித்த தகவல்களை வழங்கினர்.

டிஜிட்டல் மயமாக்கலில் எதிர்கொள்ளும் சவால்கள், தரவுபாதுகாப்பு, திறன்மேம்பாடு மற்றும் பரந்த தேசிய டிஜிட்டல் உத்தியில் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை ஒருங்கிணைத்தல் போன்ற முக்கிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கைக்கு இணங்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் முழு வழிகாட்டுதலின் கீழ், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் இந்த முயற்சியை வழிநடத்தினார்.

உறுதிசெய்வதற்கும் சுகாதாரத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பாடுபடும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தக்கலந்துரையாடலின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் கூட்டு முயற்சிகள் மற்றும் செயல்படுத்தல் உத்திகளை உருவாக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...