follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுமூன்று தூதரகங்களுக்கு தற்காலிக பூட்டு

மூன்று தூதரகங்களுக்கு தற்காலிக பூட்டு

Published on

எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த முடிவு, இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பதவிகளின் வலையமைப்பின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவும் பாரிய பொருளாதார சவால்களின் பின்னணியில், இருதரப்பு உறவுகளை திறம்பட நடத்துவதை உறுதி செய்யும் அதேவேளையில், நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு கையிருப்புகளை பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணிகள்/பதவிகளை பராமரிப்பது தொடர்பான செலவினங்களை குறைக்கும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...