follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

Published on

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த செய்தியில் அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ள பிரதி அமைச்சர், குறித்த பிறந்தநாள் விழா தனது மூத்த மகளால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரியுல்ல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், தனது மகள் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக இருப்பதாகவும், அவர் தனியார் துறையில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போலியான செய்தி மூலம், முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தனது அரசியல் இயக்கத்திற்கும் கடுமையான அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தவறான செய்தி தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, அதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தனது முறைப்பாடு ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...