இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 820,000 ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
அதன்படி, இந்த மாத இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன
2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 1 மில்லியனைத் தாண்டியது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் கணித்துள்ளது.