follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP2மியன்மார் சைபர் முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு

மியன்மார் சைபர் முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு

Published on

மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடனும், மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, மியான்மரின் மியாவாடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில், கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 15 இலங்கையர்களை மீட்பதில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் போது, ஆட்கடத்தல் சதித்திட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறும், இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...