மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது ஏற்பட்ட வானுார்தி விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலன் விசாரிக்க பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவிஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி, வீரர்களுக்குத் தேவையான மேலதிக சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.