follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

Published on

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மே 14 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்ததாவது, பாதுகாப்பானதும் நவீன வசதிகளுடன் கூடிய பேரூந்துகள் மட்டுமே எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனும் புதிய விதிமுறைகள் மூலம் பொதுப் போக்குவரத்து சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பின்பற்றுகிறதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...