follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2இவ்வருடத்தில் இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

இவ்வருடத்தில் இதுவரை 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் முதல் 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், மே மாதத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் – கோப் குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது. ஸ்ரீ...

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை...