சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமாக இருப்பதால், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல்கள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அந்தக் கடல் பகுதிகளுக்கு அருகில் படகில் செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு திணைக்களம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.