இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மே 31 ஆம் திகதி இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
உலகம் முழுவதிலுமிருந்து 108 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு முதல் 40 பேருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லந்தின் ஒபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்.
உலக அழகிப் போட்டியில் இது தாய்லந்துக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும்.