follow the truth

follow the truth

June, 7, 2025
HomeTOP220 உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்று கூடும் திகதி - வர்த்தமானி வெளியீடு

20 உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்று கூடும் திகதி – வர்த்தமானி வெளியீடு

Published on

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் 21 உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பமாகும் 16 ஆம் திகதி மாநகர முதல்வர், மாநகர துணை முதல்வர் பதவிகளுக்காக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக மேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர நேற்று வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்கை நகர சபை மற்றும் சீதாவாக்கை பிரதேச சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொலன்னாவ, பேலியகொடை, வத்தளை, மற்றும் மாபொல நகர சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

தொடங்கொட பிரதேச சபையின் மற்றும் பேருவளை நகர சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், பேருவளை மற்றும் களுத்துறை பிரதேச சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

களுத்துறை மாநகர சபையின் மற்றும் மில்லனிய பிரதேச சபையின் கன்னி அமர்வு இந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹொரண நகர சபை உட்பட மேல் மாகாணத்தின் மேலும் 8 பிரதேச சபைகளின் கன்னி அமர்வு ஆரம்பமாகும் திகதி தொடர்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...