இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை – பிரான்ஸ் இடையிலான வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமையினூடாக இயலுமை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.