மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இருவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை நடந்துள்ளது. தற்போது மூன்று சிறப்பு விசாரணைக் குழுக்கள் மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இதுவரை தெரியவில்லை.