follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை

Published on

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய மாணவ குழுவிற்கு கொடூரமாக பகிடிவதை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை செய்த சம்பவம் குறித்து பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பகிடிவதை உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக செயலணி ஒன்றை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ நடவடிக்கை எடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...

22 நாட்களில் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில், 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...