follow the truth

follow the truth

June, 26, 2025
HomeTOP2மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

Published on

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க உத்தரவிட்டார்.

அபராதம் செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனுராதபுரம் பகுதியில் வசிக்கும் 67 வயதான முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...