“இலங்கை தேயிலை (Ceylon Tea)” எனும் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இலங்கைக்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஹப்புத்தளை பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஊவா மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் பங்கெட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கஹகல்ல பிரதேசத்தில் பயன்படுத்தப்படாது, புல் வளர்ந்துள்ள நான்கு ஏக்கர் அளவிலான நிலத்தில் இந்த சுற்றுலா வலயத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கஹகல்ல சுற்றுலா வலயம் தேயிலை நூதனசாலை மற்றும் உத்ஹிந்த பூங்காவுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடன் கவர்ச்சிகரமான பிரதேசமாக உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.