நுளம்புகளால் பரவக்கூடிய வைரஸ் ஊடாக சிக்குன்குன்யா ஏற்படுகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண தெரிவித்துள்ளார்.
சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமென சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
சிலருக்கு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி சில வாரங்களுக்கு காணப்படலாமென தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பதில் விசேட வைத்திய நிபுணர் அருணி ஹதமுண தெரிவித்தார்.