follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

Published on

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அந்த திணைக்களத்தின் ஓய்வுபெற்ற உதவி தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரியந்த பண்டார ஈரியகம மற்றும் எழுதுவினைஞர் அத்தரகம கெதர தம்மிக்க நிரோஷன் ஆகியோர் இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக 177 வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட டொயோட்டா வகை ஜீப் வாகனத்திற்கு இலக்க தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்ததன் மூலம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் நெல் கொள்முதல் ஆரம்பம்: புதிய விலை விவரம் வெளியீடு

நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளைய தினம் முதல்...

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...