follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP2கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

Published on

கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், போமிரிய மத்திய மகா வித்தியாலயம் அதன் 106ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீதி அணிவகுப்பு காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகள் உள்ளிட்ட சுமார் 25 நடனக் குழுக்களின் பங்கேற்புடன் இந்த வீதி அணிவகுப்பு மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, நவகமுவ சுகதபிம்பாராம புராதன ராஜமகா விகாரையில் இருந்து குறித்த வித்தியாலயம் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகள் கீழ்க்கண்ட மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...