ஜூலை மாதம் முதல் 6 நாட்களில் மாத்திரம் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,204,046 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டொலர் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.