follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தை மீறியதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவரும் குற்றவாளிகளாக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், அடுத்த நீதிமன்ற தினத்தில் அவர்களை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...