follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1ரூ.75 இலட்ச மோசடி குற்றச்சாட்டு - ரொஹான் வீடு நோக்கி விசாரணை அதிகாரிகள் செல்லவே இல்லையாம்

ரூ.75 இலட்ச மோசடி குற்றச்சாட்டு – ரொஹான் வீடு நோக்கி விசாரணை அதிகாரிகள் செல்லவே இல்லையாம்

Published on

ரூபாய் 75 இலட்சம் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான் பிரேமரத்னவின் வீட்டிற்கு, இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான சில ஊடக செய்திகளில், பிரேமரத்னவின் வீட்டிற்குள் அதிகாரிகள் நுழைந்ததாகவும், அவர் தங்கியிருந்த இடங்களை ஆய்வு செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், அந்த செய்திகளை மறுத்த அவர், “நான் இன்னும் என் வீட்டிலேயே இருக்கிறேன்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு தெஹிவளை பகுதியில் நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டு குழுவொன்று கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.75 இலட்சம் பணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழக்கின் ஆதாரமாக களனி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டது.

அந்த வேளையில், ரொஹான் பிரேமரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...